×

தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

சென்னை: தேசிய மலரான தாமரையை, பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி, நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது என வழக்கு தொடரப்பட்டது. பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

The post தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,Tamarai ,Dinakaran ,
× RELATED கடன் செயலி மூலம் வாங்கிய பணத்தை...